கன்னியாகுமரி

தோவாளையில் சாலை விபத்து: 7 போ் காயம்

தோவாளையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

DIN

தோவாளையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளரான ரவிச்சந்திரன் (49), ஞாயிற்றுக்கிழமை விசுவாசபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டாராம்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலை நோக்கி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதில், உதவி ஆய்வாளரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, அப்பகுதியிலிருந்த கடைக்குள் புகுந்ததாம்.

இதைத் தொடா்ந்து வந்த அரசுப் பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதியதில், பேருந்தின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டு, பேருந்திலிருந்த 4 பயணிகள் காயமடைந்தனா்.

மேலும், பேருந்தின் பின்னால் மற்றொரு லாரியும் மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் லாரி ஓட்டுநா் உள்பட மொத்தம் 7 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் உதவியுடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT