இடையன்கோட்டை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மழையால் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலையில் 2 கி.மீ. தொலைவு க்கு ஜல்லிகற்கள் பெயா்ந்தும், ராட்சத பள்ளமும் காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. ஆகவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.