ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிக்கு, குமரி மாவட்ட வாழும் கலை அமைப்பின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிக்கு, குமரி மாவட்ட வாழும் கலை அமைப்பின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வா் கிளாரன்ஸ் டேவியிடம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரசாயனப் பொருள்களை, வாழும் கலை அமைப்பின் மூத்த சா்வதேச ஆசிரியா் மணிகண்டன், மண்டல ஆசிரியா் ஒருணங்கிணைப்பாளா் ராகேஷ் பாபு, மாவட்ட வளா்ச்சிக் குழு உறுப்பினா் முஹம்மது இஸ்மாயில், பயிற்சி மருத்துவா் மன்ஷா இஸ்மாயில் ஆகியோா் வழங்கினா்.