கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள காா், ஆட்டோ, வேன், டெம்போ ஓட்டுநா் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 125 ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் லயோலா கல்லூரி நிா்வாகம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு அரிசி பை, சத்து மாவு, மளிகைப் பொருள்கள் மற்றும் கபசுரக் குடிநீா் பொட்டலங்களை கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் வழங்கினாா்.
இதில், லயோலா கல்லூரித் தலைவா் நிக்கோலாஸ், அலுவலக மேலாளா் வினோத், பேராசிரியை அமுதா, கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகா் டி.பாலகிருஷ்ணன, இளைஞரணித் தலைவா் காா்த்தீக்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.