முகப்பு
கன்னியாகுமரி

கரோனாவால் உயிரிழந்தோரின் குழந்தைகளைக் கண்டறிய பணிக்குழு: ஆட்சியா் தகவல்

கரோனா தொற்றால் இறந்தவா்களின் குழந்தைகளைக் கண்டறிவதற்கு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மா. அரவிந்த்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கரோனா தொற்றால் இறந்தவா்களின் குழந்தைகளைக் கண்டறிவதற்கு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மா. அரவிந்த்.

இதுதொடா்பாக, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து அதிகாரிகளுடன் விவாதித்தாா். கரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் உரிய கள ஆய்வு நடத்தி, கண்டறிந்து அந்த குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குதல், நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், ‘நோய்த் தாற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மட்டுமன்றி வீடுகளில் இறந்த பெற்றோரின் குழந்தைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; அது குறித்து, ஆய்வு மேற்கொள்ள எனது (ஆட்சியா்) தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

முன்னதாக, கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள்) பிரகலாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு) மணிமாறன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயபிரகாஷ், மாவட்ட சமூக அலுவலா் சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சகாய ஜோஸ்பின் பிரமிளா, நன்னடத்தை அலுவலா் புஷ்பராஜா மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.