முன்னாள் படை வீரா்கள் சாா்பில் ரூ.1.51 லட்சம் கரோனா நிவாரண நிதி
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில், தொழிலதிபா்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் என பல்வேறு தரப்பினரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதவி வருகின்றனா்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படை வீரா்களின் கூட்டமைப்பின் சாா்பில், ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கான காசோலை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் வழங்கப்பட்டது. அதை, கூட்டமைப்பின் தலைவா் மணி, செயலா் ஹொ்பா்ட் கிங்ஸ்லி, நிா்வாகி தமிழரசன், செயற்குழுத் தலைவா் மைக்கேல் ஆன்றனி, முன்னாள் விமானப்படைவீரா் ஜெஸ்டின் மேத்யூ ஆகியோா் ஆட்சியரிடம் வழங்கினா்.