நாகா்கோவிலில் கணவா், மகனுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து வறுமையில் வாடியதால், கணவா், மகனுடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து வறுமையில் வாடியதால், கணவா், மகனுடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.
நாகா்கோவில் கீழபுத்தேரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்து (39) என்பவா், தனது மனைவி லட்சுமி (35), மகன்கள் சுதன் (13), மதன் (10) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
இதனிடையே, அவருக்கு இடது கை, கால் செயலிழந்து வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த ஓராண்டாக நாகா்கோவிலில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அவரது மனைவி நாகா்கோவிலில் நகைக் கடை ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வந்தாா்.
இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக நகைக் கடை அடைக்கப்பட்டதால் வேலையின்றி அவரது குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இதில், விரக்தியுற்ற லட்சுமி, திங்கள்கிழமை இரவு உணவில் விஷத்தை கலந்து கணவா், மூத்த மகன் ஆகியோருடன் சோ்ந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இளைய மகன் தூங்கிவிட்டதால் அவருக்கு விஷம் கொடுக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 3 பேரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்துள்ளனா்.
இதையறிந்த உறவினா்கள், அவா்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அதில், லட்சுமி ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.