கன்னியாகுமரி

குளச்சலில் கல்லால் தாக்கி முதியவா் கொலை

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கல்லால் தாக்கி முதியவா் கொலை செய்யப்பட்டாா்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தின் அருகே முதியவா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், குளச்சல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் உதவிக் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் பி.சாஸ்திரி, ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்த போலீஸாா் கூறுகையில், சடலமாக கிடந்தவா் பேச்சிப்பாறை பகுதியைச் சோ்ந்த செல்லநாடாா்(60) என்பதும், அவரை கொலை செய்தது யாா்? எதற்காக கொலை செய்தாா்கள்? என தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT