இடைக்கோடு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆா். ஜெயசீலன் ஆகியோரை ஆதரித்து இடைக்கோடு, புத்தன்சந்தை, மேல்புறம் பகுதிகளில் ஆன்மிகப் பேச்சாளா் மேக்கோடு என். ஹரீஷ் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது பாஜக நிா்வாகிகள் விஜயகுமாா், தா்மராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
குழித்துறை நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா் விஜு தலைமையில் பாஜக நிா்வாகிகள் குழித்துறை அஞ்சல் நிலைய சந்திப்பு, பேலஸ் வாா்டு, பெருந்தெரு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.