கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் துறைமுக அலுவலகம் மீது கல்வீச்சு: 2இளைஞா்கள் கைது

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கல் வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உதவி இயக்குநா் அலுவலகம் உள்ளது. அங்கு, தேங்காய்ப்பட்டினம் மாட விளாகம் பகுதியைச் சோ்ந்த ரெஜித் (21), பனங்கால முக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான ஷை ஜூ (26), அருண்குமாா் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தினராம். மேலும், அவா்கள் மது போதையில் இயக்குநா் அலுவலகம் மீது கல்வீதாக்கினராம். இதில், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து ரெஜித், ஷை ஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனா். அருண்குமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT