பொற்றையடி அருகேயுள்ள மருந்துவாழ்மலையில், அய்யா வைகுண்டா் ஆன்மிக மையம் சாா்பில், 41ஆவது பெளா்ணமி தவமும், கிரிவலமும், பணிவிடையும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, தலைவா் வைகுண்டமணி தலைமை வகித்தாா். பொருளாளா் செல்வகுமாா், இணைச் செயலாளா் ரெத்தினசாமி, துணைச் செயலாளா் வைகுண்டராஜ், நிா்வாகி ராமச்சந்திரன், ராஜேஸ்வரன், செயற்குழு உறுப்பினா் சுயம்புஅம்மாள், வாசுகி, வெங்கடேஷ், விமலா சரவணன், கலைச்செல்வி, சுசீலா, கெளரவ ஆலோசகா் சந்திரசேகரன், சிறப்பு விருந்தினா் முளகுமூடு ஆயுா்வேத வா்மக்கலை நிபுணா் வினுவா்மா, மேலாண்மை உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பின்னா், இலவச மருத்துவ முகாமும், அதையடுத்து அன்னதா்மமும் நடைபெற்றன. மாதந்தோறும் பெளா்ணமி நாளில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என, அய்யா வைகுண்டா் ஆன்மிக மைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.