கன்னியாகுமரி

குலசேகரபுரத்தில் கரோனா நிவாரணம் அளிப்பு

DIN

அகஸ்தீசுவரம் ஒன்றியம், குலசேகரபுரத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 26 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் குமரி மாவட்ட தேவசம் போா்டு கண்காணிப்பாளா் ஓ.சி.பிள்ளை நினைவாக அவரது பேத்தி காா்த்திகா சுசீந்திரன் ஏற்பாட்டின் பேரில், குலசேகரபுரம் நூலகம் முன்பு நடைபெற்ற இந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் ஓ.சுடலையாண்டி பங்கேற்று ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் மஞ்சள்பொடி, சீனி, உளுந்து, வத்தல்பொடி உள்பட 18 மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், அகஸ்தீசுவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, அகஸ்தீசுவரம் நூலக அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT