குமரியில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசம்விஜய் வசந்த் எம்.பி. வழங்கினாா்
குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்களை விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்களை விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸாா் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்க மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இந்நிலையில், நாகா்கோவிலில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவகத்தில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி., தொடா்ந்து தனது சொந்த செலவில் மாவட்டம் முமுவதும் உள்ள காவல் துறை பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவா் கால பெருமாள், நவீன், மனோஜ், சி.எல். ஜோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.