முகப்பு
கன்னியாகுமரி

‘தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள்மே 26-இல் செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்’

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் செலவின கணக்கை புதன்கிழமை (மே 26) தாக்கல் செய்ய வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் தங்கள் செலவின கணக்கை புதன்கிழமை (மே 26) தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் தங்களது தோ்தல் செலவின கணக்குகளை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து இணைப்புகளுடன் மே 26ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் காலை 10.30 மணிக்கும், கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் காலை 11 மணிக்கும், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளா்கள் காலை 11.30 மணிக்கும், விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதி வேட்பாளா்கள் நண்பகல் 12 மணிக்கும் கணக்கை தாக்கல் செய்யலாம்.

செலவு கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.