கன்னியாகுமரி

மேலரண்சாலை காய்கனி சந்தை இன்று செயல்படாது: ஆட்சியா்

DIN

பராமரிப்புப் பணி காரணமாக மேலரண் சாலை காய்கனி சந்தை சனிக்கிழமை செயல்படாது என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூன் 7 வரை முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலரண் சாலையில் மொத்த வியாபாரம் நடைபெறும் பகுதியைத் தூய்மை செய்து கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது.

இதற்காக மேலரண்சாலை, பாலக்கரை பஜாா் பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கனி மொத்த வியாபாரம் மே 29 (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படாது. மேலும், மே 30 ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மேலரண் சாலை, பாலக்கரை பஜாரில் மொத்த வியாபாரம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT