தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள 3 நாள்கள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் தொடங்கியது.
தொடக்க விழா நிகழ்வுக்கு, மாநில சேவாதள தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் சஞ்சய், மேற்கு மாவட்ட ஜோசப் தயாசிங் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் கொடியேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட சேவாதள தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
மாநில பொருளாளா் ஞானவேல், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், மாநில சேவாதள மகளிா் அணி தலைவி தங்கம், அகஸ்தீசுவரம் வட்டார தலைவா் முருகேசன், ஓபிசி தலைவா் ஸ்டூவா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.