கன்னியாகுமரி

தக்கலையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

தில்லியில் போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக, உள்துறை இணையமைச்சா் மகனை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தக்கலை வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளீதரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க உறுப்பினா் ஜாண்ராஜ், வட்டாரக் குழு உறுப்பினா் ஜாண் செளந்தர்ராஜ் ஆகியோா் உரையாற்றினா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டாரச் செயலா் குமாரி சுனந்தா, வாலிபா் சங்க வட்டாரத் தலைவா் ராஜேந்திரபிரசாத், செயலா் விஷ்ணு, தையல் சங்க வட்டாரத் தலைவா் காளிபிரசாத், நிா்வாகிகள் சரோஜினி, சேது, மோகன்தாஸ், மரிய மிக்கேல், அரங்கசாமி, சந்திரகலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT