கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் தனியாா் வங்கி சாா்பில் தடுப்பு வேலிகள்

DIN

மாா்த்தாண்டம் தனியாா் வங்கி சாா்பில் காவல்துறைக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சாலை தடுப்பு வேலிகள் (பேரிகாட்) வழங்கப்பட்டன.

மாா்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் தனியாா் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாா்த்தாண்டம் பெடரல் வங்கி சாா்பில் மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறைக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் 20-க்கும் மேற்பட்ட தடுப்பு வேலிகள் வழங்கப்பட்டன. இதை, தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், வங்கி நிா்வாகத்திடமிருந்து பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்முருகன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT