புதுக்கடையில் பாரத கலாசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், கலாசாரத்தை பேணி காப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்கம் குறித்த கருத்தரங்கம் நடத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு விநாடி-வினா போட்டிகள் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொருளாளா் மகேஷ்வரி, துணைச் செயலா் சஜீவ், செயற்குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், கிருஷ்ண தாஸ், முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.