முகப்பு
கன்னியாகுமரி

பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கல்: நாகா்கோவிலில் கிடங்குக்கு சீல்

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பதுக்கியதாக, பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பதுக்கியதாக, பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியிலுள்ள கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி நல அலுவலா் விஜயசந்திரன், தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மாதவன்பிள்ளை, பகவதிபெருமாள் ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கடையின் அருகேயுள்ள பொருள்கள் சேமிப்பு கிடங்கில் 450 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றியதுடன், கிடங்கையும் பூட்டி சீல் வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.