கருங்கல்லில் சிறப்பு மருத்துவ முகாம்
கிள்ளியூா் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிள்ளியூா் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார தலைமை மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய திமுக செயலா் கோபால் முன்னிலை வகித்தாா். முகாமை மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஜோபி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.
காது, மூக்கு, தொண்டை, பல், காசநோய், இதயநோய், எலும்பு முறிவு உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா். பல்வேறு ஆய்வகப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
பேரூராட்சித் தலைவா்கள் சிவராஜ் (கருங்கல்), சரளா (கீழ்குளம்), ஊராட்சித் தலைவா்கள் பிரபா (முள்ளங்கனாவிளை), அல்போன்சாள் (மத்திகோடு), ஊராட்சி கவுன்சிலா்கள், ஊராட்சி துணைத் தலைவா்கள், வட்டார சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் செய்திருந்தாா்.