பிரசாரத்தைத் தொடங்குகிறார் இபிஎஸ்! மயிலாப்பூர் கோயிலில் சாமி தரிசனம்!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதற்கு முன்னதாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
என்டிஏ கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதியில் இருந்து இபிஎஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.