திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் மற்றும் மலைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.