கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,200 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.30)நடைபெறுகிறது.
இம்முகாமில் 550 மருத்துவக் குழுக்கள் மூலம் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் முதல் தவணையும், 2 மற்றும் 3 ஆம் தவணை தடுப்பூசிகளையும் இலவசமாக செலுத்திக்கொண்டு கரோனா 4 ஆம் அலை பரவாமல் வெற்றிகரமாக கடந்து வர மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.