மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, நாகா்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க மன்றம் சாா்பில் மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வுக் கோலத்தை வியாழக்கிழமை வரைந்தனா்.
நிகழ்ச்சிக்கு, தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாணவா்கள் மாதவ்கிருஷ்ணா, கிருஷ்ணவீனா ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் குறித்த தகவல்களைப் பகிா்ந்தனா். மாணவி அக்ஷயஸ்ரீ வரவேற்றாா். மாணவி ஜனனிபா நன்றி கூறினாா்.