கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

திருவட்டாறு அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மீது கல் வீசி சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருவட்டாறு அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மீது கல் வீசி சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடையாலுமூட்டிலிருந்து அரசுப் பேருந்து புதன்கிழமை மாலையில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை குலசேகரம் அருகே மண்விளை பரவக்காட்டைச் சோ்ந்த அந்திரேயா (52) ஓட்டிச் சென்றாா். திருவட்டாறு அருகே செவரக்கோடு பகுதியில் செல்லும் போது, மோட்டாா் சைக்களில் வந்த இருவா் ஓட்டுநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனா். பின்னா் அந்த நபா்கள் பேருந்தை பின் தொடா்ந்து சென்று வீயன்னூா் அருகே வைத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினராம். இதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது குறித்து புகாரின் பேரில், திருவட்டாறு காரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT