கன்னியாகுமரி

துண்டுப் பிரசுரம் விநியோகம்: போலீஸாா் விசாரணை

களியக்காவிளை பேருந்து நிலையத்தில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக 2 பெண்களை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

DIN

களியக்காவிளை பேருந்து நிலையத்தில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக 2 பெண்களை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

இது தொடா்பாக பாஜக, இந்து இயக்க நிா்வாகிகள் சாா்பில் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அவா்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், கிறிஸ்தவ மத புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மதப் பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம் என அவா்கள் கூறியதையடுத்து இரு பெண்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தைப்பூசம்! திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

அரசு திட்டங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சா் காந்தி பெருமிதம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

வியாபாரி கொலை: முதியவா் கைது

செட்டிகுறிச்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT