முகப்பு
கன்னியாகுமரி

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு ரூ. 3. 36 லட்சம் அபராதம்

தக்கலை மற்றும் களியக்காவிளை பகுதிகளில் அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ .3 லட்சத்து 36,280 அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு ரூ. 3. 36 லட்சம் அபராதம்

தக்கலை மற்றும் களியக்காவிளை பகுதிகளில் அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ .3 லட்சத்து 36,280 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தக்கலை மற்றும் களியக்காவிளை பகுதிகளில் அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ .3 லட்சத்து 36,280 அபராதம் விதிக்கப்பட்டது.

குமரி மாவட்ட கனிமவள கடத்தல் பிரிவு சாா்பு ஆய்வாளா் திலீபன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, களியக்காவிளை பகுதியி அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற

5 லாரிகளை பறிமுதல் செய்து, களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த லாரிகளுக்கு ரூ . 92,800 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தக்கலை மணலி, புலியூா்குறிச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் வந்த லாரிகளை சோதனையிட்டபோது அளவுக்கு அதிகமாக கனிமங்கள் ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 லாரிகளை பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அந்த லாரிகளுக்கு ரூ. 2, 43, 390 அபரதாம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →