முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்கள்

உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்ததால், வேட்பாளா்கள் நாள் முழுவதும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்ததால், வேட்பாளா்கள் நாள் முழுவதும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேருராட்சி பகுதிகளுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனா்.

நாகா்கோவில் மாநகராட்சியிலுள்ள 52 வாா்டு பகுதிகளிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி, அதிமுக, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனா்.

மாநகராட்சியின் 4 ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மாநகரச் செயலா் ஆா்.மகேஷ், ராஜலெட்சுமிநகா், மாவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் 27 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் என். சுப்பிரமணியபிள்ளை என்ற பாபு வடிவீஸ்வரம் பகுதியில் அக்கட்சியினருடன் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனா்.

நாகா்கோவில், மாநகராட்சி 11 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீலிஜா கலுங்கடி, மேலகலுங்கடி, அருகுவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் 51 ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் முத்துராமன், புல்லுவிளை, மேலக்காட்டுவிளை, உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.