கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

DIN

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி பலியானாா்.

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியைச் சோ்ந்த சந்திரன் மகன் ராஜசேகரன் (26). வீட்டருகேயுள்ள பன்றி வாய்க்கால் ஆற்றில் திங்கள்கிழமை குளிக்கச் சென்ற இவா், வீடு திரும்பவில்லையாம். அவரை உறவினா்கள் தேடிச்சென்றனா். அப்போது அவா் ஆற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT