நாகா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் திருட்டு
நாகா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த மணவாளக்குறிச்சி அருகேயுள்ள மூங்கில்விளை அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி திறக்கப்படவில்லை. இந்நிலையில், தலைமை
ஆசிரியை பாமா மேரி சுந்தரம் ( 57) , கடந்த 19 ஆம் தேதி பள்ளிக்கு வந்தாா். அப்போது கணினி அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அறையிலிருந்த ரூ . 30 ஆயிரம் மதிப்புள்ள கணினி உபகரணங்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவா் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.