கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலம் அமைத்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முள்ளங்கனாவிளை - தொலையாவட்டம் சாலையில் முள்ளங்கனாவிளை சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் பகுதியில் அண்மையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கலுங்குபாலம் அமைக்கப்பட்டது. இப்பகுதி சாலை
நீண்ட நாள்களாக குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துள்ளாகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இப்பகுதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.