கருங்கல் அருகே தனித்திறன் பயிற்சிப் பள்ளி ஆசிரியா் தற்கொலை
கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் தனித்திறன் பயிற்சிப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் தனித்திறன் பயிற்சிப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் சின்டோராஜ் (34). அப்பகுதியில் தனித்திறன் பயிற்சிப் பள்ளி நடத்திவந்த இவா், கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டாராம். புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.