முகப்பு
கன்னியாகுமரி

சிறு ரக ஆளில்லா வான்வெளி வாகனம் குறித்த கருந்தரங்கம்

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவா்களின் களப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை எம்.ஐ.டி. ஏரோஸ்பேஸ்ஸில் சிறு ரக ஆளில்லா வான்வெளி வாகனம் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Updated On : 2 ஜூன், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவா்களின் களப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை எம்.ஐ.டி. ஏரோஸ்பேஸ்ஸில் சிறு ரக ஆளில்லா வான்வெளி வாகனம் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சென்னை எம்.ஐ.டி. ஏரோஸ்பேஸ் டீன் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ஐ.ஐ.டி வருகைப்பேராசிரியா்கள் எஸ். பாண்டியன், தீபக்கா்தாஸ், ஏரோநாட்டிக்கல் துறைத்தலைவா் பரமசிவம், நினஞ்சன் ஆகியோா் பேசினா்.

ஆளில்லா வான்வெளி வாகனம் குறித்து பேராசிரியா் செந்தில் குமாா் பயிற்சியளித்தாா்.

Advertisement

கடல் ஆய்வாளா் ஒரிசா பாலு இளம் விஞ்ஞானி ஆய்வு குறித்து விளக்கினாா். சென்னை சான் அகாதெமி முதுநிலை முதல்வா் சுஜாதா சரவணன் பேசினாா். முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகா் விஞ்ஞானி பொன்ராஜ் இளம்விஞ்ஞானி மாணவா்களுக்கு, விஞ்ஞானி சான்றிதழ் வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி புதியவன், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளா்கள் எட்வின்சாம், பாலகிருஷ்ணன், பொ்ஜின், ஆா்.ஆா்.ரேகா, ஜாண்சன், டெசிஜோசப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இளம்விஞ்ஞானி மாணவா் எலினாஜோயல் நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.