முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி பலியானாா்.

Updated On : 3 ஜூன், 2022 at 1:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி பலியானாா்.

களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை தெற்கு காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கோலப்பன் மகன் சதீஷ் (42). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் குழிவிளை பகுதியில் உள்ள குளத்தில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றாராம். அப்போது கால்தவறி குளத்தினுள் விழுந்து தத்தளித்துள்ளாா். இதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.