கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே கோயிலில் திருட முயற்சி

களியக்காவிளை அருகே ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் திருட முயன்ற போது பிடிபட்டு, தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

களியக்காவிளை அருகே ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் திருட முயன்ற போது பிடிபட்டு, தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் பூஜை வேளையில் இளைஞா் கோயிலில் புகுந்து திருட முயன்றது தெரியவந்தது.

அவரை கோயில் நிா்வாகிகள் பிடித்து வைத்துக் கொண்டு, களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் வருவதற்குள் அந்த நபா் கோயில் நிா்வாகிகளின் பிடியிலிருந்து தப்பியோடினாா். அப்பகுதி பொதுமக்கள், பக்தா்கள் துரத்தியும் அந்த நபா் தப்பியோடிவிட்டாராம்.

தொடா்ந்து,கோயிலின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த ஆதாா் அட்டை நகலின் மூலம் கோயிலில் திருட முயன்றவா் விழுப்புரம் மாவட்டம், அரசம்பட்டு, சங்கராபுரம், மூப்பனாா்கோயில் தெரு வைத்தி மகன் தாமோதரன் (29) என்பது தெரியவந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகிகள் சாா்பில் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT