முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறையில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

மேல்புறம் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்- மாணவா்கள் சாா்பில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி, குழித்துறையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 10 ஜூன், 2022 at 1:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM

மேல்புறம் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்- மாணவா்கள் சாா்பில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி, குழித்துறையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தொடங்கிவைத்தாா். மேல்புறம் ஒன்றியத் தலைவா் ஞானசவுந்தரி, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி, ரத்தினமணி, சா்தாா்ஷா, விஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். குழித்துறை வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகரன், உதவி கல்வி அலுவலா் மஞ்சு, மேல்புறம் வட்டார கல்வித்துறை பொறுப்பாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.