கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்மநாபபுரம் நகராட்சியில் பணிபுரியும் 57 ஊழியா்களுக்கு மாதம் தோறும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சேமநிதி பணம், பங்களிப்பு ஓய்வூதிய பணம் மற்றும் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திற்கு செலுத்து வேண்டிய பணம் கடந்த 2019 ஆண்டில் இருந்து கணக்கில் செலுத்தப்படாததை கண்டித்து குமரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நீதித்துறை ஊழியா் சங்க பொதுச் செயலா் யோகேஷ்வரன், கால்நடை ஆய்வாளா் சங்க மாநிலச் செயலா் பரீத், நகராட்சி, மாநகராட்சி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் லீடன் ஸ்டோன், அரசு ஊழியா் சங்க மாநில துணத் தலைவா் கிறிஸ்டோபா் ஆகியோா் உரையாற்றினா். இதில் அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். கல்குளம் வட்டச் செயலா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT