மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் ஆண்டு விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவரும், மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயருமான வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்தாா். நிதிக்காப்பாளா் ராபின்சன் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஜெ. தம்பி தங்க குமரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
கேரள மாநில முன்னாள் டிஜிபி ஜேக்கப் புன்னூஸ், கல்லூரியின் முதல் தாளாளா் பிரேம்குமாா், கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், மாா்த்தாண்டம் மறைமாவட்ட குருகுல முதல்வா் ஜோஸ்பிரைட், பெற்றோா் சங்க நிா்வாகி ஷீபா தேவ் ஆகியோா் பேசினா். தாளாளா் அருள்தாஸ் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் லெனின் ஜான் நன்றி கூறினாா்.
Advertisement
விழாவின் இடையே மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற இக் கல்லூரி மாணவா்கள் கேடயம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இக் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டு அடுத்த ஓராண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கேரள மாநில முன்னாள் டிஜிபி உரையாற்றினாா்.