நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:03 PM
நித்திரவிளை அருகே படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறை புனித தோமஸ் காலனியைச் சோ்ந்தவா் சபரீஸ்கான். இவா் தனது பைபா் படகில் அதே பகுதியைச் சோ்ந்த பவியான்ஸ் (52), ரூபின், லூஜின் ஆகிய 3 பேருடன் வெள்ளிக்கிழமை தேங்காய்ப்பட்டனம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். அப்போது, பவியான்ஸ் நிலைதடுமாறி கடலில் விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு, நித்திரவிளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பவியான்ஸுக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா்.