நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு
சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.
சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.
குற்ற வழக்குகள், போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பாகப் பணிபுரிந்த போலீஸாருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளா்கள் ஜோசப், பாபு, விஜயகுமாா், குமார்ராஜ், பழனி ஆகியோரைப் பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுப் பத்திரங்களை வழங்கினாா்.