நெடுவிளை சுடலைமாடசுவாமி கோவிலில் ரூ. 9.90 லட்சத்தில் மேற்கூரைப் பணி
நெடுவிளை அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ரூ. 9. 90 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணியை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெடுவிளை அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ரூ. 9. 90 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணியை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், ராஜாக்கமங்கலம் ஒன்றிய குழுத்தலைவா் அய்யப்பன், ஒன்றிய அதிமுக செயலா் வீராசாமி, மாவட்ட கவுன்சிலா் ஜாண்சிலின் விஜிலா, முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.எம்.செல்வகுமாா் உள்ளிடோா் பங்கேற்றனா்.