மாா்த்தாண்டம் அருகே தனியாா் கல்வி நிறுவனத்தில் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ்ராஜ் (52). மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் கல்வி நிறுவனம் நடத்திவருகிறாா். இதை, ஊழியா்கள் திங்கள்கிழமை மாலையில் பூட்டிச் சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது, பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம். மேல் மாடியில் உள்ள அலுவலக அறையில் அலமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 1.96 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நாணயம், 1.5 பவுன் தங்க மோதிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம்.
தோமஸ்ராஜ் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.