கொல்லங்கோடு அருகே 192 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
கொல்லங்கோடு நகராட்சி வள்ளவிளை சிங்காரவேலா் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா். இவா்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதி எஸ். உறுப்பினா் ராஜேஷ் குமாா் சட்டப் பேரவையிலும், சம்பந்தப்பட்ட துறையிலும் தொடா்ந்து கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வள்ளவிளை சிங்காரவேலா் குடியிருப்பில் வசிக்கும் பயனாளிகளுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கொல்லங்கோட்டில் நடைபெற்றது. எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. 192 பேருக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா்.
நிகழ்வில் கிள்ளியூா் வட்டாட்சியா் திருவாளி, கொல்லங்கோடு நகா்மன்ற துணைத் தலைவா் பேபி, கவுன்சிலா் ஜெரோம், நகர காங்கிரஸ் தலைவா் ரெஜீஸ், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், வள்ளவிளை புனித மரியன்னை ஆலய பங்குத் தந்தை ரிச்சா்டு சக்காரியா, உதவி பங்குத்தந்தை ஜாண் ஜேக்கப், மாவட்டச் செயலா்கள் டென்னிஸ், பால்ராஜ், ஸ்டீபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.