கன்னியாகுமரி

குமரியில் தடையை மீறி உண்ணாவிரதம்: 37 போ் கைது

கன்னியாகுமரி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாதானபுரம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்

DIN

கன்னியாகுமரி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாதானபுரம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் ரவுண்டானாவில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அப்பகுதியில் மின்விளக்குகள் எரியவில்லை என்றும், ரவுண்டானா பகுதியில் அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாத காரணத்தினால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதாகவும் கூறி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் வை.தினகரன் தலைமையில் மகாதானபுரம் ரவுண்டானாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்திலி ஈடுபட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT