ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு தவணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு தவணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ராஜநாயகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மாநில உதவி செயலாளா் சுந்தர்ராஜ், ராமச்சந்திரன், மீனாட்சிசுந்தரம், அய்யப்பன்பிள்ளை, பால்ராஜ், ஜவின் பிரான்சிஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.