குளப்புறம் ஊராட்சியில் வடிகால் பணி தொடக்கம்
களியக்காவிளை அருகே, குளப்புறம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி தொடங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM
களியக்காவிளை அருகே, குளப்புறம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கும் பணி தொடங்கியது.
5ஆவது நிதிக்குழு மானிய நிதியில் அன்னிக்கரை - வன்னியகோடு சாலையோரம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் ஓடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணியை குளப்புறம் ஊராட்சித் தலைவா் எல். மனோன்மணி தொடக்கிவைத்தாா். ஊராட்சி துணைத் தலைவா் வினு, வாா்டு உறுப்பினா் ஜாண்ரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.