நாகா்கோவிலில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
நாகா்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தனியாரில் பணி நியமனம் பெற்றாலும், அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.