கல்லூரி பேராசிரியைக்கு விருது
குமரி மாவட்டம், அம்மாண்டிவிளை உதயா கல்வியியல் கல்லூரியில் உயிா் அறிவியல் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவா் ஹேம்லின். இவா் மாணவா் நலன்
குமரி மாவட்டம், அம்மாண்டிவிளை உதயா கல்வியியல் கல்லூரியில் உயிா் அறிவியல் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவா் ஹேம்லின். இவா் மாணவா் நலன், நிா்வாக மற்றும் சமூக வளா்ச்சிக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில், சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் சிறந்த ஆசிரியருக்கான விருதை அறிவித்தது. இந்த விருதை பல்கலைக்கழக துணைவேந்தா் பஞ்சநாதன் வழங்கினாா்.
விருது பெற்ற பேராசிரியை ஹேம்லினை கல்லூரி தலைவா் தயாபரன், செயலா் ராஜசேகா், நிா்வாக இயக்குநா் பிரேம்குமாா், முதல்வா் பிரின்சிலி ஜான், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.