கன்னியாகுமரி

கொல்லங்கோடு நகராட்சியில் ஆட்சியா் ஆய்வு

DIN

கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நகராட்சிக்குள்பட்ட நித்திரவிளை காய்கனி சந்தை-மீன் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு, சந்தையின் தூய்மை, சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிபடுத்த நகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் அலுவலா்களின் வருகைப் பதிவேடு, கோப்புகளை ஆய்வு செய்தாா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்து, மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, கொல்லங்கோடு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) க. ராமதிலகம், நகராட்சி பொறியாளா் பேரின்பம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT